ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை செப்டம்பர் 22-ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 120B (கிரிமினல் சதி), 420 (மோசடி) மற்றும் 465 (போலி ஆவணம் தயாரித்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவை செப்டம்பர் 22-ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் நிர்வாகி காந்தா சுப்பாராவ், இயக்குநர் கே.லட்சுமி நாராயணா உள்ளிட்ட 26 பேர் மீது சிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நாராயணனிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.